அரசு ஊழியர்களுக்கு பணமழை.. இப்போ இரண்டு ஜாக்பாட்! – dttamil.com

அரசு ஊழியர்களுக்கு வெளியாகும் இரண்டு நச் அறிவிப்புகள்.
அரசு ஊழியர்களுக்கு விரைவில் பணம் மழை போல கொட்டப்போகிறது. அரசு ஊழியர்களின் சம்பளத்தை நேரடியாக பாதிக்கக்கூடிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது என்றால் மத்திய அரசு fitment factorஐ உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் மேலும் உயரும். Fitment Factorஐ 2.57இல் இருந்து 3.68ஆக உயர்த்த வேண்டுமென நீண்டகாலமாக மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 26000 ரூபாயாக உயரும்.
அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து மத்திய அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2.57 fitment factor அடிப்படையில் 18000 ரூபாய் அடிப்படை சம்பளம் கிடைக்கிறது. இதையடுத்து, fitment factor 3.68ஆக உயர்த்தப்பட்டு அடிப்படை சம்பளம் 26000 ரூபாயாக உயரும் என கூறப்படுகிறது. அதாவது, அடிப்படை சம்பளமே 8000 ரூபாய் உயருகிறது.
அடிப்படை சம்பளமே இவ்வளவு உயர்ந்தால் மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? fitment factor 3.68ஆக உயர்த்தப்பட்டால், அதாவது அடிப்படை சம்பளம் 26000 ரூபாயாக உயர்த்தப்பட்டால், அரசு ஊழியரின் சம்பளம் 95680 ரூபாயாக உயரும் (26000X3.68 = 95,680).