‘131 டெஸ்ட், 225 ஒருநாள் போட்டிகளில்’…ஒரு நோ-பால் கூட வீசாத லெஜண்ட் பௌலர்: இந்தியர்தான்!

16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறைகூட நோ-பால் வீசாத பௌலர் இருக்கிறார்.
கிரிக்கெட்டில் பேட்டிங் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் பந்துவீச்சும் மிகவும் முக்கியம்தான். பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்க விடாமல் கட்டுப்படுத்துவதுதான் பௌலர்களின் தனித்திறமை. டெஸ்டில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும்கூட, 20 விக்கெட்களை வீழ்த்தினால் மட்டுமே, ஒரு அணியால் வெற்றிபெறவே முடியும்.
அப்படி பௌலர்கள் தொடர்ந்து பந்துவீசுகையில் சில நேரம் நோ-பால், ஒயிட் போன்ற பந்துகளை அடிக்கடி வீச வேண்டிய நிலை இருக்கும். பல முன்னணி பந்துவீச்சாளர்கள்கூட முக்கியமான நேரத்தில் நோ-பாலை வீசி சொதப்பியிருக்கிறார்கள். ஆனால், நோ-பால் வீசாமல் 16 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பௌலர் இருந்திருக்கிறார் என்றால், அதனை நம்ப முடிகிறதா? அவர் இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ்தான்.
1893ஆம் ஆண்டில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த அவர், 1978 முதல் 1994 வரை கிட்டதட்ட 16 வருடங்கள் ஒரு நோ-பாலை கூட வீசாமல் இருந்திருக்கிறார். வேறு எந்த இந்திய வீரரும் நோ-பால் வீசாமல் ஓய்வுபெற்றதே கிடையாது. கபில் தேவ் மட்டுமே, நோ-பால் வீசாத இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.